Monday 17 August 2015

தென் சென்னை கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தின் ஈராண்டு மாநாடு

கடந்த 15.08.2015அன்று தென் சென்னை கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தின் ஈராண்டு மாநாடு, புனித தாமஸ்  தலைமை அஞ்சலக  வளாகத்தில் அதன் பொறுப்புத் தலைவர்  தோழர். R .கனகவேல் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.  

மாநாட்டில், சுதந்திரப் போராட்டத் தியாகியும்  பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர். R . நல்லகண்ணு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு ஆற்றியது  சிறப்பான அம்சமாகும். 

மேலும் அஞ்சல் மூன்று  அகில இந்திய சங்கத்தின் தலைவரும் மாநிலச் செயலருமான தோழர். J . இராமமூர்த்தி , மாநிலச் சங்கத்தின் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் , அகில இந்திய சங்கத்தின் உதவிப் பொதுச் செயலரும் , மாநில நிதிச் செயலருமான தோழர். A . வீரமணி ,  மாநிலச் சங்கத்தின் உதவித் தலைவர் தோழர். V . வெங்கட்ராமன் ,அஞ்சல் மூன்று மாநிலச்  சங்கத்தின்    முன்னாள்   உதவிச்    செயலர்    தோழர்.  C கருணாகரன், AIPEU  GDS  NFPE சங்கத்தின் அகில இந்திய  துணைப்பொதுச் செயலரும் , தமிழ் மாநிலச் செயலருமான தோழர் . R . தனராஜ், அஞ்சல் நான்கின் மாநில நிதிச் செயலர் தோழர். S . இரவிச்சந்திரன்,  
                       அஞ்சல் மூன்று கோட்டச்  செயலர் தோழர்   D. இரவி
               வட சென்னை அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர்.                    ஏஞ்சல்  சத்தியநாதன்  
உள்ளிட்ட தோழர்கள்  கலந்துகொண்டு  சிறப்பித்தார்கள்.

மாநாட்டில் கீழ்க் கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக  தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் . புதிய நிர்வாகிகளின்  பணி  சிறக்க  அன்பான  வாழ்த்துக்கள் !

தலைவர்                                :  தோழர். R . கனகவேல் 
கோட்டச் செயலர்              :  தோழர். N . ராஜேந்திரன் 
கோட்ட நிதிச் செயலர்     :  தோழர். T.  இரவிக்குமார் 



No comments:

Post a Comment